PMKISHAN 12TH INSTALLMENT NOT CREDIT - 2022

Internet Cafe



 பிஎம் கிசான் திட்டத்தின் 12வது தவணையாக சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோதி நேற்று விடுவித்துள்ளார். இந்த 2000 ரூபாய் இன்னும் உங்களுக்கு வரவில்லை என்றால், செய்ய வேண்டியது என்ன என்பதை விவசாயிகள் எதரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


11 கோடி விவசாயிகள்

இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் சுமார் 11 கோடி தகுதியுள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் 16000 கோடி ரூபாயை விடுவித்தார். இதன்படி, 11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக 2000 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், தகுதியுள்ள விவசாயிகளாக இருப்பினும் சிலருக்கு இன்னும் பிஎம் கிசான் பணம் வந்துசேராமல் இருக்கலாம். அவர்கள் பின்வரும் வழியில் புகார் அளிக்கலாம்.

செய்ய வேண்டியது

  • pmkisan-ict@gov.in அல்லது pmkisan-funds@gov.in ஆகிய இமெயில் ஐடிகளுக்கு உங்கள் புகாரை மெயிலாக அனுப்பலாம்.

  • 011-24300606, 155261 ஆகிய எண்களை அழைத்து புகார் தெரிவிக்கலாம்.

  • 1800-115-526 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டும் புகார் தெரிவிக்கலாம்.

Tags

Made with Love by

SEO Engine Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which…
To Top